Saturday, February 25, 2006

சுயம்...


தன்னை அறிந்தவன்.....
உலகம் அறிகின்றான்!

தன்னை அளந்தவன்.....
உலகம் அளக்கின்றான்!

தன்னைத் துறந்தவன்....
துன்பம் துறக்கின்றான்!

தன்னைத் திறந்தவன்...
'சொர்க்கம்' திறக்கின்றான்!

தன்னில் நிலைத்தவன்...
உலகில் நிலைக்கின்றான்!

தன்னில் நிறைந்தவன்
உலகை நிறைக்கின்றான்!

-யாழ் சுதாகர்

0 comments: