Saturday, February 25, 2006

மௌனம்...




மௌனம் என்பது.....
கோழைத்தனத்தின் போர்வை அல்ல.
தெளிந்த மனதின் பார்வை அது.

மௌனம்.....
உணர்ச்சிகளின் சரிவு அல்ல.
உள்ளிருக்கும் மனதின் கோபுர நிமிர்வு.

மௌனமே மனோபலம்....மயக்க நிவாரணி.
தியானபீடம்!

நதியும் அதுவே...அக்னியும் அதுவே!

மௌன நதியில்...கோபம் அணையும்.
மௌன நெருப்பில் பகைகள் நீறாகும்.

மௌனம் சபிக்காது!
சபித்தால்...சந்ததி தாங்காது!

கேடயமும் அதுவே...ஆயுதமும் அதுவே!

கேள்வியும் அதுவே...பதிலும் அதுவே!

கடவுளோடு கதைக்க வேண்டுமா?
'மௌனப் பாலம்' கட்டு.
உன்னுடன் நீயே
முதன் முறையாகப் பேசும் அதிசயம்!
பின்...'நீயே கடவுள்' என்றுணர்வாய்.

மௌனம்....
காதலைக் காவியம் ஆக்கும்.
தாய்மையில் கோயில் கட்டும்.

பாசத்தால் பந்தல் போடும்.
பக்தியில் பரவசம் குடிக்கும்.

மனம்...ஒரு அழகான புல்லாங்குழல்!
ஆனால் அதைக் கையிலெடுத்து
புருஷோத்தம வித்துவத்துடன்
தேவ ராகம் மீட்ட்.....
'மௌனம்' வர வேண்டும்!

கிளை விட்டுக் கிளை தாவாத 'மலை' மனம்
மௌனத்தின் வரம்!

அமைதிப் பூங்காக்கள் அனைத்துக்கும்
மௌனமே உரம்!
அதனால்தான் ஆன்மீகத்தின் அனைத்துப் பிரிவுகளும்
மௌனத்தை சிபாரிசு செய்கின்றன.

மௌனம்....
தன்னம்பிக்கையின் குரு.
தன்னடக்கத்தின் தாய்.

நுண்ணறிவின் தந்தை.
நூலகம்.

மௌனம் என்பது....
சுமைகளில் இருந்து தப்பிக்க முயலும்
சுயநலம் அல்ல!

சுமைகளைக் கூட இலவம் பஞ்சாக மாற்றித் தரும்
மந்திர ஓசை!
சகிப்புத் தன்மையின்
சங்கீத பாஷை!

அப்பப்பா [தாத்தா]
ஒரு சின்ன விதையைத்தான் விதைத்தார்.
அதற்குள்ளிருந்து இத்தனை பெரிய மாமரமா?!

மௌனத்தை விதை!
இன்னும்....
அகலமாகவே ஆச்சரியப்படுவாய்!

- யாழ் சுதாகர்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

E MAIL -
yazhsudhakar@gmail.com

PHONE - 9840419112

சத்தியம்...



சத்தியம் பேசும் நாவில்
'சரஸ்வதி' வீற்றிருப்பாள்.
சத்தியம் வாழும் வீட்டில்
'லட்சுமி' நிலைத்திருப்பாள்.
சத்தியம் சேர்ந்த நெஞ்சில்
'சக்தி' கொலுவிருப்பாள்.
சத்தியம் செறிந்த நெஞ்சில்
சுய நலம் கரைந்து போகும்.
புத்தனின் செழித்த ஞானம்
சத்தியம் பிழிந்து ஊட்டும்.....

- - -

சாதி மதம் கதைப்பதில்லை.
துவேஷங்கள் விதைப்பதில்லை.
தேதி பார்த்து முடிப்பதில்லை.
தேவைகளால் முடிவதிலை.
சூதுகளால் கவிழ்வதில்லை.
சூழல்களால் அமிழ்வதில்லை.
காதினிலே வம்பு சொல்லும்
காற்றுத் தேடி அலைவதில்லை.
பொது நலனை மறப்பதில்லை.
பொன் குணங்கள் துறப்பதில்லை.

- - -

சத்தியத்தில் வேலி இல்லை.
சத்தியத்தில் போலி இல்லை.
சத்தியத்தில் 'பற்று' இல்லை.
சலனங்களின் புற்று இல்லை.
வித்துவச் செருக்கு இல்லை.
வீண் மமதை நெருப்பு இல்லை.
சத்தியம் அலைகள் போல
அடிக்கடி கலைவதில்லை.
சத்தியம்...சாசுவதம்!
சத்தியம் அன்பின் தவம்!

- - -

சத்தியம் அலைவதில்லை.
சத்தியம் குழைவதில்லை.
சத்தியம் மலைப்பதில்லை.
சத்தியம் மருள்வதில்லை.
இகழ்ச்சியால் குனிவதில்லை.
புகழ்ச்சியால் குளிர்வதில்லை.
சத்தியம் இளைப்பதில்லை.
பாபங்கள் உழைப்பதில்லை.
சத்தியம் களைப்பதில்லை.
தன்மானம் களைவதில்லை.

- - -

எத்தனை தடை வரினும்
சத்தியம் சரிவதில்லை.
சத்தியம் செய்யும் பணிகள்....
சத்தியம் மிளிரும் கலைகள்...
சத்தியம் ஒளிரும் பேனா....
சரித்திரம் புகழ வாழும்!
நித்திய இன்பம் கூட்டும்
நிகரிலா மனிதத் தொண்டை
சத்தியம் கரங்கள் குவித்தே
வணங்கும்..வாழ்த்தும்..போற்றும்!

- - -

சத்தியம் இயல்பில் தென்றல்!
சீண்டினால்...'மோனப் புயல்'
சத்தியம் கேட்பதில்லை.
சத்தியம் கொடுப்பதற்கே!
சத்தியம் அழுவதில்லை.
சத்தியம் புன்னகையே!
சத்தியம் விழுவதில்லை.
சத்தியம் எழுவதற்கே!
சத்தியம் சோர்வதில்லை.
சத்தியம் 'சோதி மரம்' !

- யாழ் சுதாகர்

சுயம்...


தன்னை அறிந்தவன்.....
உலகம் அறிகின்றான்!

தன்னை அளந்தவன்.....
உலகம் அளக்கின்றான்!

தன்னைத் துறந்தவன்....
துன்பம் துறக்கின்றான்!

தன்னைத் திறந்தவன்...
'சொர்க்கம்' திறக்கின்றான்!

தன்னில் நிலைத்தவன்...
உலகில் நிலைக்கின்றான்!

தன்னில் நிறைந்தவன்
உலகை நிறைக்கின்றான்!

-யாழ் சுதாகர்

ஒளி...




'முப்பது வயதென்றாலும்
எப்பவும் நீயெனக்கு
பத்து வயதுக் குழந்தையெடா'

என்று சொல்லி விட்டு...
சில மாதங்களிலேயே
படமாகிப் போன அப்பாவின் பாசத்தில்....

எங்கள் கல்விக்காக
தன் வசந்தங்களை வழியனுப்பி வைத்த
அம்மாவின் தியாகங்களில்....

அவசர வாழ்க்கையில்
அமிழ்ந்து நான் மறந்தாலும்
வெளி நாட்டிலிருந்து
மறவாது எனைத் தொடரும்
தங்கையின் வாழ்த்து மடல்களில்....

என் மகுடம் போன சமயத்திலும்
தேடி வந்து'.....
நாங்கள் இருக்கின்றோம்' என்று
ஞாபகப்படுத்திச் சென்ற
ஒரு சில நண்பர்களின் குரலில்....

கடும் தவம் ஏதுமின்றி
கடவுளை யான் கண்டேன்!

- யாழ் சுதாகர்

ஆசை...




நல்லைக் கந்தனின் மணியோசைபோல-
என்சொல்லிலே ஜீவன் வேண்டும்!
உள்ளம் என்பது வற்றிடா அன்பின்
ஊற்றுப்போல் நிலைக்க வேண்டும்!


வல்லையில் உறுதியாய் நிற்கின்ற பனைபோல
கொள்கையில் 'உறுதி' வேண்டும்.
தொல்லைகள் சூழ்ந்தாலும் தில்லையின் ராஜனாய்
துள்ளி நான் ஆட வேண்டும்.


மின்சாரம் ஓய்வு எடுகின்ற இரவிலும்
என் பேனாவில் வெளிச்சம் வேண்டும்.
மின்விசிறி சுழலாத நெருப்பு இராவிலும்
பனிக்காலப் புலமை வேண்டும்!



பொறாமையின் நெருப்பு சுடுகின்றபோது
பொறுமையின் குளுமை வேண்டும்!
சோதனை கழுத்தை வளைக்கின்ற போதும்
'போதனை' பூக்க வேண்டும்!


சோர்ந்து துவள்கின்ற வேளையில் கூட
'சத்தியம்' போற்ற வேண்டும்!
ஊர்ந்து செல்கின்ற முதுமையில் கூட
உள்ளத்தில் 'எறும்பு' வேண்டும்!


தேர்ந்து கேட்கும் இசையின் 'ஒளி'யிலே
என் ஜீவனைக் காண வேண்டும்!
தேடிப் பிடிக்கின்ற மனிதன் முகத்திலே
தெய்வத்தைத் திருட வேண்டும்!


என் முன்னிலே சிரித்து முதுகிலே ஏசிடும்
மாந்தரை வாழ்த்திட வேண்டும்.
புண்ணிய நோக்கிலே தொண்டுகள் செய்யாது
தொண்டு என் இயல்பாக வேண்டும்!



சிறியவர் பெரியவர் ஆகின்ற போது
சிரம் தாழ்த்தித் தொழுதிட வேண்டும்!
பெரியவர் 'சிறியவர்' ஆகின்ற சூழலில்
மன்னிக்கும் பக்குவம் வேண்டும்.

சூழ்ச்சிகள் அம்பு பாய்ச்சிடும் வேளை
'கீதையின் கவசம்' வேண்டும்.
வீழ்ச்சிகள் வரிசையாய் நிகழ்கின்ற போதும்
வென்று யான் நிமிர வேண்டும்!


கோடைபோல் வறுமை சுடுகின்ற போதும்
குலையாத வலிமை வேண்டும்.
கோடிகள் வந்தே குவிந்தாலும் கும்பிடும்
ஆண்டியின் தெளிவு வேண்டும்!


தூங்கிடும் வேளையும் நெஞ்சிலே அன்பு
தூங்காதிருக்க வேண்டும்.
துயரமே சூழ்ந்தாலும் கண்ணிலே கருணை
காயாதிருக்க வேண்டும்!


குணத்திலே வானத்தை நகல் செய்து வாழும்
தலைமுறை எனக்கு வேண்டும்.
சினத்திலே சமநிலை குலைகின்ற போதும்
சிக்கனம் சொல்லில் வேண்டும்.



ஓங்கிடும் புகழால் ஒரு புள்ளி கர்வம்
ஒட்டாத தலையே வேண்டும்.
தேங்கிடும் துயரிலும் 'தேக்கு' தத்துவம்
ஆக்கிடும் ஆற்றலும் வேண்டும்.


பள்ளமும் சிகரமும் சரி நிகர் சமனாகும்
என்கின்ற பக்குவம் வேண்டும்.
கொள்வதும் கொடுப்பதும் நானல்ல அவன்
என்றஎண்ணமே நிலைக்க வேண்டும்!

- யாழ் சுதாகர்



1. யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[ முதல் பகுதி ] NEW

2.
யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[பழைய தொகுதி.. புதிய படங்களுடன் ]

3.
யாழ் சுதாகரின் புகைப்படத் தோரணங்கள்... [New]

4.
எம்.ஜி.ஆரும் ஒளி விளக்கும்...

5.
.'கலைக்குரிசில்' சிவாஜி கணேசன்....

6.
.'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ்...

7.
'கான சரஸ்வதி' பி.சுசீலா

8.
'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ்

9.
'கீத நதி 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

10.
தூறல்

11. கே.எஸ்.ராஜா பற்றிய ஒரு ரசிகனின் நினைவலைகள்...

12.
பாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...



13.யாழ் சுதாகர்....வானொலி நிகழ்ச்சிகளைப் பாராட்டி இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள்




யாழ் சுதாகர் பதில்கள்

யாழ் சுதாகர் ...சிந்தனைகள்

யாழ் சுதாகர்..சில குறிப்புகள்






YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR,
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

yarl suthahar,yarl suthakar,yarl suthagar,yarl sudhakar,yaal suthakar,yaal suthahar,yaal sudhakar,yazh suthahar,yazh suthagar,yazh sudhakar,yaazh sudhakar,yaazh suthakar,yaazh suthahar,yal sudhakar,yal suthakar,yal suthakar,yal suthagar,tamil poems, kavithaikal,kavithaigal,tamil internet radio
yaalppaanam suthakar,yalpanam suthakar,yaalppaanam sudhakar,yalpanam sudhakar
yarlsuthahar,yarlsuthakar,yarlsuthagar,yarlsudhakar,yaalsuthakar,yaalsuthahar,
yaalsudhakar,yazhsuthahar,yazhsuthagar,yazhsudhakar,yaazhsudhakar,yaazhsuthakar,
yaazhsuthahar,yalsudhakar,yalsuthakar,yalsuthakar,yalsuthagar,
yaalppaanamsuthakar,yalpanamsuthakar,yaalppaanamsudhakar,yalpanamsudhakar